பொருள் விரிவாக்கம்

மண்சரிவில் பாதிக்கப்பட்ட களுபோவிடியான மகா வித்தியாலயத்தை மறு சீரமைப்பதற்கு நல் உள்ளங்களை கொண்ட பலர் இந்த செனேஹே சியபத செயற்றிட்டத்திற்கு முன்வந்தார்கள்

2018 ஜுன் 13         மாத்தறை

 

news-1

மலேஷியா - மகா கருணா பௌத்த சங்கம் மலேஷியா - தேரவாத பௌத்த மன்றம் பாதுகாப்பு அமைச்சு அனர்த்த முகாமைத்தவ அமைச்சு மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆகியவற்றின் பங்களிப்புடன் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் செனஹே சியபத செயற்றிட்டத்தின் மூலம் மாத்தரை மாவட்டத்தில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட களுபோவிடியான மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடமானது நிர்மாணிக்கப்படுகின்றது. இந்த கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்றிட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வானது 2017 மே மாதம் இடம்பெற்றது.

களுபோவிடியான மகா வித்தியாலயத்தில் ஒரு கட்டிடத்தில் ஒவ்வொரு வகுப்பறைகளும் 80X25 அடி என்ற அளவில்; கட்டப்படுகின்றது. அதன் திறப்பு விழா ஜுன் மாதம் 13ம் திகதி இடம்பெற்றது. மலேஷியாவின் தலைமை அதிகரண சங்க நாயக மற்றும் திராவிட பௌத்த கவுன்சில் ஆலோசகர் கௌரவ வண. புடேவத்தே சரணங்கர நாயக்க தேரர், கௌரவ மஹமேவுனா புத்த மடத்தின் ஆலோசகர் ஹினிதும நந்த தேரர், கௌரவ ஷர்தா தொலைக்காட்சி வலையமைப்பின் ஆலோசகர் வண. அலுதெனிய சுபோதி தேரர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் W.A குலசூரிய மலேஷியாவின் தேரவாத பௌத்த கவுன்சில் தலைவர் டென் லெங் ஹ{வா, ஷர்தா ஊடக வலையமைப்பின் தலைவர் ரோஷான் வன்னிநாயக்க, பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை இயக்குனர் பதும் ஹேவகே, சிவில் பாதுகாப்புத்துறை கேணல் G.D.H.K விஜயநாயக்க, மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் ஊடக மற்றும் வர்த்தக பிரிவு பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க ஆகியோர் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றினர்

இளைஞர் விவகாரங்கள்ää திட்ட மேலாண்மை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாணக்க அமெரிக்காவிலிருந்து தனது கருத்தினை பின்வருமாறு தெரிவித்திருந்தார். கடந்த வருடம் வெல்லத்தில் பாதிக்கப்பட்ட களுபோவிடியான மகா வித்தியாலயத்தின் பதிய கட்டிடத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய சிறப்பு முயற்சியில் தங்களின் நேரத்தையம் முயற்சிகளையும் பங்கிட்டக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் உன கூறினார்.

களுபோவிடியான மகா வித்தியாலயத்தின் கட்டுமானம் ஷர்தா ஊடக வலையமைப்பின் நிதியுதவி வழங்கியதுடன் மலே~pயா – மகா கருணா பௌத்த சங்கம் மலேஷியா – தேரவாத பௌத்த சபை ஆகியவற்றினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்திற்கு நிதியுதவியுதவி வழங்கப்படுவதுடன் சிவில் நிர்மாண குழுவினரால் எவ்வித செலவும் இன்றி இந்த கட்டிடமானது கட்டப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேற்பார்வையின் கீழ் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெரும் ஒருங்கிணைந்த செயற்றிட்டமாகும்.