பொருள் விரிவாக்கம்

டயலொக் பாடசாலை ரக்பி போட்டிகளில் நேர்மையான ஆட்டத்துடன் போட்டியின் தரத்தையும் அதிகரிக்கும் வண்ணம் முக்கிய பகுதிகளை சீர்மைப்படுத்த சுயாதீன தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நியமனம்

2024 கூடும் 22         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

மனுஜ நிம்மான – பொதுச் செயலாளர், SLSRFA, எம்.ஹெச். மார்ஸோ (ஓய்வு பெற்றவர்) - முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் ஆணையாளர் மற்றும் தேசிய ரக்பி அணித்தலைவர் பிரதி பொலிஸ்மா அதிபர், அருண ஜயசேகர - சர்வதேச ரக்பி அங்கீகாரம் பெற்ற நீதித்துறை அதிகாரி, லசித குணரத்ன - இலங்கை ரக்பியின் முன்னாள் தலைவர், எம். ஆர். லதீப் (ஓய்வு பெற்றவர்) - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கலாநிதி. நமித் சங்கல்பன - விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ நிபுணர், ஆசிய ரக்பி மற்றும் சர்வதேச ரக்பி போட்டி நாள் மருத்துவர், கலாநிதி. கே. ஏ. பி. கிரியெல்ல - ஆலோசகர், விளையாட்டு மருத்துவம், ரஞ்சித் சந்திரசேகர - முன்னாள் தலைவர், SLSFRA, கமல் ஆரியசிங்க – தலைவர், SLSRFA.

எதிர்வரும் டயலாக் பாடசாலை ரக்பி லீக் மற்றும் நொக்-ஔட் போட்டிகளில் தரம், ஒழுக்கம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் அங்கமாக, இலங்கை பாடசாலை ரக்பி கால்பந்து சங்கம் (SLSRFA) டயலாக் ஆசிஆட்டா பிஎல்சியின் ஒத்துழைப்புடன் ஒரு சுயாதீன தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது. மதிப்புமிகு தொழில்முறை நிபுணர்கள் அடங்கிய இந்தக் குழு, போட்டியின் நடத்தையில் ஒரே நிலையை ஏற்படுத்தும் வகையில் தரநிலைகளை உயர்த்தி, தொழில்முறை அணுகுமுறையை கொண்டுவருவதில் கவனம் செலுத்தும்.

உலக ரக்பியின் மையக் கொள்கைகள், மதிப்புகள், வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுடன் இணங்கும் வகையில் SLSRFA இற்கு தொழில்நுட்பம் மற்றும் இதர தொடர்புடைய பிரச்சினைகளில் ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்கும் பொறுப்பை இந்த ஆலோசனைக்குழு கொண்டுள்ளது. இத்தகைய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்தும் பொறுப்பு SLSRFA மீது உள்ளது.

புதியதாக அமைக்கப்பட்ட குழுவில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர். லதீப் (ஓய்வு பெற்றவர்), முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் ஆணையாளர் மற்றும் தேசிய ரக்பி அணித்தலைவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். எச்.மார்ஸோ (ஓய்வு பெற்றவர்), இலங்கை ரக்பியின் முன்னாள் தலைவர் திரு. லசித குணரத்ன, சர்வதேச ரக்பி அங்கீகாரம் பெற்ற நீதித்துறை அதிகாரி திரு. அருண ஜயசேகர, SLSFRA முன்னாள் தலைவர் திரு. ரஞ்சித் சந்திரசேகர, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ நிபுணர் கலாநிதி. நமித் சங்கல்பன, ஆசிய ரக்பி மற்றும் சர்வதேச ரக்பி போட்டி நாள் மருத்துவர் மற்றும் விளையாட்டு மருத்துவ ஆலோசகர் கலாநிதி. கே. ஏ. பி. கிரியெல்ல ஆகியோர் அடங்கியுள்ளனர்.

"ரக்பி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் நியமனத்தை அறிவிப்பதில் நாங்கள் பேருவகை அடைகின்றோம். இந்த முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் யாதெனில் இலங்கை ரக்பி துறையில் பிரமுகர்களின் திறமைகளைப் பயன்படுத்தி எங்கள் போட்டிகளின் தரம் மற்றும் தரநிலைகளை உயர்த்துவதாகும். இவர்களின் மதிப்புமிக்க அறிவு, தரநிலைகளை உயர்த்துவதில் மட்டுமல்லாமல், மாணவர்களின் பார்வையில் பல அனுகூலங்களைத் தருவதிலும் உதவும். மேலும், இவர்களின் வழிகாட்டுதல், அபாயங்களை குறைப்பதில், ஒழுக்க பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மற்றும் களத்தில் பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரியாக நிர்வகிப்பதில் முக்கியப் பங்காற்றும்," என்று இலங்கை பாடசாலை ரக்பி காற்பந்து சங்கத்தின் (SLSRFA) தலைவர் கமல் அரியசிங்க அவர்கள் தெரிவித்தார்.

முக்கிய கொள்கைகள் அடிப்படையில் செயல்படும் ஆலோசனைக் குழு, போட்டியின் அமைப்பு, விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை, பாதுகாப்பு நடவடிக்கைகள், தரவு முகாமைத்துவம், ஆளுகை, நிர்வாகம், டிஜிட்டல் தீர்வுகள், வீரர்களின் மேம்பாட்டு வழிமுறைகள் மற்றும் வீரர்களின் நலன் ஆகிய பல்வேறு அம்சங்களை வலுப்படுத்த முயல்கிறது. இந்த முக்கிய பகுதிகளை கவனிக்கையில், போட்டியின் தொழிற்பாடு நிலையாக நடைபெறுவதையும், களத்திலும் களத்திற்கு வெளியிலும் சீராகச் செயல்படுவதையும் உறுதிசெய்கின்றது.

இந்த கொள்கைகளின் அடிப்படையில் குழுவின் கூட்டு திறமை மற்றும் உறுதியான பின்பற்றுதல் மூலம், 2024 டயலொக் பாடசாலை ரக்பி பருவத்தை மிக வெற்றிகரமான ஒரு முன்னெடுப்பாக மாற்ற முனைகிறது. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் திருப்திகரமான அனுபவத்தை வழங்க இது உதவும். பாடசாலை ரக்பி வீரர்களை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு அவர்களை செதுக்கியெடுப்பதே இந்த முன்னெடுப்பின் அறுதி அவா ஆகும்.