பொருள் விரிவாக்கம்

முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் அனைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள மையங்களுக்கு டயலொக் இலவச WiFi மற்றும் தொலைக்காட்சி சேவைகளை வழங்குகிறது

18 ஏப்ரல் 2020         கொழும்பு

 

news-1

கோவிட்-19 காலப்பகுதியில் நாட்டின் மருத்துவ நிலையங்களுக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி முப்படைகளினால் நிர்வகிக்கப்படுகின்ற அனைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள மையங்களுக்கும் இலவச WiFi மற்றும் டயலொக் டெலிவிஷன் சேவைகளை வழங்குவதன் மூலம் அவசரகால சேவைகளை ஆதரிக்க முன்வந்தது.

இந்த இக்கட்டான நிலையில் டயலொக் 20 மருத்துவமனைகளில் 27 வீடியோ அடிப்படையிலான டெலிமெடிசின் அலகுகளை உருவாக்க MOH க்கு உதவி செய்வதுடன் மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) கருவிகளை நன்கொடையாக வழங்கியது. மொபைல் தொலைபேசி இணைப்புகள் மற்றும் கைபேசிகளை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இலவசமாக வழங்கியது. Remote National Psycho-Social Support Service (RNPSSS), IDH-க்கு இலவச இணைய இணைப்பு தீர்வுகள், video conference வசதிகள் மற்றும் மொபைல் சாதனங்களை வழங்கியது, மேலும் மனுசத் தெரண, சியத லெகதுகம மற்றும் ITN மனுசத்வயே சத்காரய செயற்றிட்டங்களின் ஊடாக நாடளாவிய ரீதியில் 13 மாவட்டங்களிலும் (யாழ்ப்பாணம் உட்பட) 265 கிராமங்களில் 70,872 பேருக்கு உலர் உணவு பொதிகளை தினமும் விநியோகிக்கிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான தேசிய முயற்சிகளை ஆதரிப்பதற்காக டயலொக் நடத்தி வரும் பல முயற்சிகளில் இந்த நன்கொடை செயற்றிட்டமும் ஒன்றாகும். மேலும், 15 மில்லியன் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், பாதுகாப்பாக இருப்பதனையும், வீட்டிலேயே இருப்பதனையும், எப்போதும் இணைந்திருப்பதனையும் உறுதிசெய்யும் முயற்சிகளில் e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) ஆகியவற்றுக்கு இலவச அணுகலையும் வழங்குகின்றது