பொருள் விரிவாக்கம்

இலங்கையின் பெருநிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் ‘மனிதநேய ஒன்றிணைவு’ செயற்றிட்டத்துடன் யுனிலீவர் இணைந்துள்ளது

நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 200,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2022         கொழும்பு

 

Unilever Joins Manudam Mehewara Emergency Relief Initiative

படத்தில் இடமிருந்து வலமாக - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழு சந்தைப்படுத்தல்; வர்த்தக நாமம் மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க, சர்வோதய சிரமதான சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கமல் கமகே, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் டயலொக் எண்டர்பிரைஸ் குழும பிரதான அதிகாரி நவீன் பீரிஸ், யுனிலீவர் ஸ்ரீலங்காவின் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் அழகு மற்றும் நல்வாழ்வு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நிலுஷி ஜயதிலக, யுனிலீவர் ஸ்ரீலங்காவின் வீட்டு பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து பிரிவு சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சர்மிளா பண்டார, யுனிலீவர் ஸ்ரீலங்காவின் ஊடக மற்றும் செயற்படுத்தல் பிரிவு தலைவர் சன்ன தென்னகோன் மற்றும் யூனிலிவர் ஸ்ரீலங்காவின் ஒழுங்குமுறை மற்றும் கூட்டாண்மை விவகாரங்கள் மற்றும் வெளிவிவகார தொடர்பு பிரிவு தலைவர் ஹரினி ராஜதாச

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 200,000 குடும்பங்கள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட "மனிதநேய ஒன்றிணைவு" அவசரகால நிவாரணத் திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக யுனிலீவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, நிறைவேற்றும் பங்குதாரரான சர்வோதய மற்றும் சுயாதீன கணக்காய்வாளர் PwC Sri Lanka, CBL Group, Citi, Sunshine Holdings PLC மற்றும் Huawei Technologies Lanka Co Pvt Ltd ஆகியவற்றுடன் இணைந்துகொள்வதாக உறுதியளித்துள்ளது.

சமூக நல்வாழ்வை இலக்காகக் கொண்ட பங்காளர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் 'மனிதநேய ஒன்றிணைவு' செயற்றிட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 200,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். தற்போது ​​25 மாவட்டங்களிலும் அவசரகால நிவாரணங்கள் விநியோகிக்கப்படுவதுடன் மேலும் 100,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயனுள்ள பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை இந்த “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண திட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

இந்நிகழ்வில் யுனிலீவர் ஸ்ரீலங்காவின் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் அழகு மற்றும் நல்வாழ்வு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நிலுஷி ஜயதிலக கருத்து தெரிவிக்கையில், “எமது சக இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பரீட்சியமில்லாத சவால்களை காணும் போது இது எங்களை ஆழமாக சிந்திக்க வைப்பதுடன் யூனிலீவரில், நிலையான வாழ்வை பொதுவானதாக மாற்றுவதில் நாங்கள் தொடர்ந்து செயற்படுகின்றோம். எங்களின் பல நோக்கம் கொண்ட வர்த்தக நாமங்கள் எப்பொழுதும் எமது மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதன் மூலம் நிலையான இலங்கையை கட்டியெழுப்ப உதவுவது ஒரு பொறுப்பாகவே கருதுகின்றது. பெரு நிறுவனங்களாக நாம் அனைவரும் நமது பங்கைச் செய்து வருகிறோம் என்றாலும் இன்று நாம் எதிர்கொள்ளும் தேசிய நெருக்கடியானது, ஒரு வர்த்தக நாமம் அல்லது ஒரு பெரு நிறுவன தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தை விட மிகப் பெரிய அளவில் காணப்படுகின்றது. இங்குதான் கூட்டு முயற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதநேய ஒன்றிணைவு செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக டயலொக் சர்வோதய மற்றும் ஏனைய ஸ்தாபக பங்காளிகளின் முயற்சியை ஒன்றிணைக்கும் ஒரு தளத்தை உருவாக்குவதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்"

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் டயலொக் என்டர்ப்ரைஸ் குழும பிரதான அதிகாரி நவீன் பீரீஸ் கருத்து தெரிவிக்கையில், "இந்த கடினமான காலகட்டத்தில் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய அவசர நிவாரணங்களை விரைவாக வழங்குவதற்கு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது என்பதை ஒரு சிறந்த நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். இந்த மனிதாபிமான நடவடிக்கையில் இணைவதன் மூலம் முழு சமூகத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆணையை வழங்கிய யுனிலீவர் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கடுமையாக பாதிக்கப்பட்ட 200,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய அவசர நிவாரணம் வழங்குவதற்காக நாங்கள் செயல்படுத்தி வரும் மனிதாபிமான நடவடிக்கையில் 100,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்க முடிந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியில் எங்களுடன் இணைந்துக்கொள்ள இந்த நாட்டில் உள்ள ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன். ஒன்றாக நாம் அனைவரும் இணைந்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நமது சொந்த மக்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கான கூட்டு முயற்சியில் இணையுமாறு ஏனைய அனைத்து பெருநிறுவனங்களுக்கு மனிதநேய ஒன்றிணைவு அழைப்பு விடுக்கின்றது. அனைவரும் தங்களின் கிரெடிட்/டெபிட் கார்ட், வங்கி வைப்பு eZ Cash, Star Points, genie அல்லது 0776 421421 என்ற இலக்கத்திற்கு Top up செய்வதன் மூலம் இணைந்துகொள்ள முடியும். நன்கொடை வழங்குதல் தொடர்பாக செயல்முறை பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://dlg.lk/donate க்கு செல்லுங்கள்.

மனிதநேய ஒன்றிணைவு பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://dlg.dialog.lk/manudam-mehewara க்கு செல்லுங்கள்.