Body

கதிர்காம எசல பெரஹரவுக்கு 16 வது முறையாகவும் டயலொக் அனுசரணை வழங்குகின்றது.

28 ஜுலை 2020         கொழும்பு

 

news-1

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு, இந்த ஆண்டும் உருகுணை கதிர்காம எசல பெரஹர சுகாதார அமைச்சகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கிய சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேலை ஜூலை 21 ஆம் திகதி தொடங்கிய உருகுணை கதிர்காம ஆலயத்தின் வருடாந்த பெரஹர திருவிழா ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை பொதுமக்களின் பங்களிப்பு இன்றி நடைபெறும். நீண்ட காலமாக வரலாற்று சிறப்பு மிக்க எசல பெரஹரவிற்கு இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா 16 வது முறையாகவும் தொடர்ந்து தனது பங்களிப்பு வழங்கியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க உருகுணை கதிர்காம ஆலயத்தின் எசல பெரஹர மூன்று முக்கிய பெரஹராக்களைக் உள்ளடக்கும். பக் மஹா பெரஹர, எசல பெரஹர, மற்றும் இல் மஹா பெரஹரா ஆகியவை இதில் அடங்கும். கதிர்காம புனிதப் பூமிஜயில் நடைபெறும் பூஜைகள் மற்றும் வருடாந்த மத நிகழ்வுகளில் எசல பெரஹர முக்கிய இடத்தினை வகிக்கின்றது. பெரஹர தொடங்குவதற்கு முன்னைய நாள், புனித பூமியில் உள்ள சங்கவாச வளாகத்தின் பிரித் மண்டபத்தில் இரவு முழுவதும் பிரித் சொற்பொழிவு பாரம்பரியமாக நடைபெறும். பெரஹர திருவிழாவிற்கு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த பிரித் பிரசங்கம் பஸ்நாயக்க நிலமேயின் தலைமையில் நடாத்தப்படும். பெரஹரவின் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் அனைத்து மக்களுக்கான ஆசிர்வாதங்களை பெறுவதுமே இதன் முக்கிய நோக்கம். இந்த பெரஹர கதிர்காம பெருமான் மற்றும் வள்ளி அம்மை ஆகியோரின் திருமணத்தை நினைவு கூறும் முகமாக நடாத்தப்படுகின்றது என முன்னோர்களால் நம்பப்படுகிறது. அதன்படி எசல 2020 ஆம் ஆண்டின் ஜுலை 21 ஆம் திகதி இரவு சுப முகூர்த்தத்தில் ஆரம்பிக்கும் இப் பெரஹர நிகழ்வானது ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க மாணிக்க கங்கையின் ஜீவமாலி நதிக்கறையில் நீர் வெட்டும் விழாவுடன் நிறைவடையும்.

டயலொக் ஆசிஆட்டா நீண்ட காலமாக இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் நாட்டின் முக்கிய கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பாளராகவும் இருந்து வருகிறது. அவற்றுள் கண்டி ஸ்ரீ தலதா பெரஹர, களனி துருது மஹா பெரஹர, கங்கராம நவம் மஹா பெரஹர, கட்டபரு எசல மஹா பெரஹர, மற்றும் கோட்டே ராஜமஹா விகார பெரஹர ஆகியவை அவற்றில் சில. அத்தோடு பௌத்தாலோக வெசாக் வலையம் மற்றும் கங்காரம விகாரையின் ஸ்ரீ புத்த ரஷ்மி வெசாக் வலையம் ஆகியவற்றிற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றது. திம்புலாகல ஆச்சிரமத்தின் நுழைவாயிலினை (வாஹல்கட) அமைப்பதற்கும் டயலொக் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளது.