Body

இந்திய-ஆசிய எக்ஸ்பிரஸ் கடலடித் தொலைதொடர்பு கேபிள் மூலம் உலகுடன் இலங்கை இணைப்பு: டயலொக் ஆசிஆட்டாவின் முதலீடு

2025 மே 8         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

நினைவுப் பலகை திறப்பு (இடமிருந்து வலமாக புகைப்படம் எடுக்கப்பட்டது): திரு. லசந்த தெவரப்பெரும, குழு தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திருமதி. லிம் லி சான், குழு தலைமை இயக்க அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழு தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. விவேக் சூட், குழு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர், ஆசிஆட்டா குழு பெர்ஹாட்; மேதகு பத்லி ஹிஷாம் ஆடம், மலேசியாவின் உயர்ஸ்தானிகர்; திரு. ஹர்விந்தர் சிங், இந்திய துணைத் தூதர்; மற்றும் திரு. ரங்க கரியவசம், குழு தலைமை தொழில்நுட்ப அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

Dialog Customers Contribute to Little Hearts

IAX நீர்மூழ்கிக் கேபிள் அறிமுகம் (இடமிருந்து வலமாக புகைப்படம் எடுக்கப்பட்டது): திரு. லசந்த தெவரப்பெரும, குழு தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசியாட்டா பிஎல்சி; திருமதி. லிம் லி சான், குழு தலைமை இயக்க அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. ரங்க கரியவசம், குழு தலைமை தொழில்நுட்ப அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. ஹர்விந்தர் சிங், இந்திய துணைத் தூதர்; மேதகு பத்லி ஹிஷாம் ஆடம், மலேசியாவின் உயர்ஸ்தானிகர்; திரு. விவேக் சூட், குழு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர், Axiata Group Berhad; மற்றும் திரு. சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இந்தியா-ஆசிய எக்ஸ்பிரஸ் (IAX) கடலடித் கேபிள் அமைப்பை தொடங்கி வைத்துள்ளது. இது, நாட்டின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட முக்கிய முதலீடாகும். இதன் மூலம், டயலொக் நிறுவனம் சர்வதேச தொலைதொடர்பு கட்டமைப்பில் மேற்கொண்ட மொத்த முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டுப் பங்காளித்துவத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. IAX கேபிள் அமைப்பு, 5G, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உயர் தரவு தேவை உள்ள சேவைகளுக்கான உயர் வேக, உயர் கொள்ளளவுடைய இணைய வசதியை வழங்குகிறது.

மும்பை, சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை உள்ள முக்கிய உள்ளடக்க மையங்களுடன் IAX இணைவது மூலமாக, இலங்கையை ஒரு முக்கிய பிராந்திய தகவல் தொடர்பு மையமாக மாற்றுகிறது. மாத்தறையில் உள்ள டயலாக் கேபிள் லேண்டிங் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மலேசியாவின் உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஆடம், இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் திரு. ஹர்விந்தர் சிங், ஆசிஆட்டா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. விவேக் சூட், மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்க மற்றும் டயலொக் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இக்கேபிள் நிறுவல், ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள BBG மற்றும் MSC கேபிள்களுடன் இணைந்து, இலகுவான மற்றும் நம்பிக்கைக்குரிய இணைய அனுபவத்தை உறுதி செய்கிறது. இது ஒரு கட்டமைப்புப் பிழை ஏற்பட்டாலும் மற்றவை மூலம் தொடர்ச்சியான சேவையை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

டயலொக் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்கே கூறுகையில், “IAX கேபிள் வழியாக இலங்கையின் டிஜிட்டல் முதுகெலும்பை வலுப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிகாட்டும் உறுதிப் படியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.